Saturday, May 4, 2013

common man's grudge


விஜய் டி.வியின் நீயா? நானா? பற்றி பதிவு போடும் முகநூல் அன்பர்கள், அனைவரும் பதிவை ஆரம்பிக்கும் விதம் ஒன்று போலவே இருக்கிறது. யதேச்சையாக நேற்று நீயா? நானா? பார்த்த போது, சேனல் மாற்றும் போது நீயா? நானா? பார்க்க நேரிட்டு, என் மனைவி நீயா? நானா? வை பார்த்த உடனே, அனைத்து விடுங்கள் என்றார், ஆனாலும் நான் பார்த்த போது, இப்படிதான் பெரும்பாலான பதிவுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலோனோர்

தொடர்ந்து பார்க்கிறார்கள் என்று பதிவுகளை பார்க்கும் போது தெரிகிறது.

இந்த மனநிலை விசித்திரமாக இருக்கிறது. நீயா? நானா? பார்ப்பதில் என்ன தவறு? ஏன் இதை இவர்கள் மீண்டும் மீண்டும், தற்செயல் போல் கட்டியமைக்க வேண்டும் என்று யோசித்தால் ஒன்று புலப்படுகிறது. நீயா? நானா?. சாதாரண மக்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி. ஃபேஸ்புக்கில் பதிவு போடும் நம் நண்பர்கள், தாங்கள் காமன் மேன் இல்லை என்று நிருபிக்க, இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று நிறுவ வேண்டும். அதற்குதான் இத்தனை பாடு..

சில நேரங்களில் நீயா?நானா? உப்பு சப்பில்லாத தலைப்புகளில் நேர விரயம் செய்த போதிலும், பல நல்ல தலைப்புகளில் நிகழ்ச்சி நடத்தி சாதாரண மக்கள் மத்தியில் ஒரு விவாத புள்ளியை தொடங்கி வைத்த வகையில், நீயா? நானா? நிச்சயம் பாரட்டபட வேண்டிய நிகழ்ச்சியே..கண்ணா லட்டு திங்க ஆசையா பார்க்க நாம் வெட்கபடுவதில்லை.நமது சாதியை பற்றி பீற்றிக் கொள்ள வெட்கபடுவதில்லை. ஒரு மோசமான அரசியல்வாதியை, தலைவனாக கொள்வதில் வெட்கமில்லை.ஆனால் நீயா ? நானா? பார்த்தால் வெட்கபடுகிறோம்.

இதைதான் common man's grudge என்று சொல்வார்களோ?