Tuesday, August 7, 2012

யார் காரணம்?


கிழக்கு தஞ்சையில் ஒரு கிராமம். ஊரில் பெரும்பான்மை சமுகமாக ஒரு இனமும், அதற்கு அடுத்ததாய், தலித்களும் வாழும் இடம். காலகாலமாக பண்ணைக்கு உழைத்து கொட்டியதை தவிர வேறு எந்த பலனையும் அடையாத அந்த ஏழை தலித் குடும்பத்தில், உத்ராபதி மட்டும் அடங்க மறுத்தான். பண்ணைக்கு கூலி வேலைக்கு செல்ல விரும்பாமல், திருப்பூர்க்கு சென்று உழைத்து, ஊருக்கு திரும்பி, ஆறு மா நிலத்தை, குத்தகைக்கு பிடித்து சொந்தமாக விவசாயம் செய்தான். அவனை பார்த்து இன்னும் சில பேரும் திருப்பூருக்கு பஸ் ஏறினர். காலங்காலமாக அவனது முன்னோர் கண்ட கனவின், விளைவாய் திகழ்ந்தான்.

ஒரு நாள் உத்ராபதியின் தந்தை இறந்து விட சவ ஊர்வலம் செல்ல ஏதுவாய், அந்த ஊரின் பெரிய புள்ளியின் தோட்டத்தில் இருந்து வெளியே நீட்டியிருந்த மரக்கிளை, துக்கதிற்கு வந்திருந்த ஒரு இளவட்டங்களால் ஒடிக்கப் பட்டது. மறு நாள் பஞ்சாயத்து கூடி, மரக்கிளைக்கு அபராதமாய், ஐம்பாதயிரம் ருபாய் கட்ட சொல்லி ஆனையிட்டது. பணத்தை கட்டமுடியாமல், நிலத்தை திருப்பி தந்து, கடன்பட்டு, செங்கல் சூளைக்கு உத்ராபதியின் குடும்பமே வேலைக்கு சென்றது.

இப்படியாக ஒரு யுகத்தின் கனவு முறியடிக்கப் பட்டது.
கைபர் கணவாய் வழியே வந்த ஆரிய படை தான் இந்த சாதி கொடுமைக்கு காரணம் என்று திராவிட வேங்கைகள் உறுமுகின்றன.
எல்லா கொடுமைக்கும் காரணம், வர்க்க பிரிவினை தான் என்று சிவப்பு தோழர்கள் முழங்குகின்றனர்.

இதை படிக்கும் உங்களுக்கு வேறு காரணம் தோன்றலாம். உத்ராபதியை யார் கேட்க போகிறார்கள்?

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..