Thursday, August 23, 2012

எனக்கு பிளாடி மாரி தான் புடிக்கும் !



ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம், இந்தியாவிற்கு ஒரு ஷார்ட் டிரிப் செல்ல நேரிட்டது. சென்னையில் உள்ள ஒரு நண்பருடன், ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள ரெயின் ட்ரி ஹோட்டல் மாடியில் இயங்கும் பார்க்கு, ஞாயிறு மதியம் சென்றேன். முன்பு கிழே, முதல் தளத்தில் பெரிய இடத்தில் இயங்கி கொண்டிருந்த பாரை, மொட்டை மாடியின் இடுக்கு  பிடித்தாற் போல் உள்ள இடத்திற்க்கு நகர்த்தியது ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு அருகில், இரண்டு ஜோடி அமர்ந்திருந்தது. இரு பையன்களுக்கும் வயது 25 ல் இருந்து 28 க்குள் இருக்கும்.  கழுத்தில் சங்கிலிகள், ஐ போன், காஸ்ட்லி ஸு என்று ஒரு ரேஞ்சில் இருந்தனர் இருவரும். நேர்மாறாக, கூட இருந்த இரு பெண்களின் உடைகளும், பாவனைகளும் வெகு சாதாரணமாக இருந்தன. இருவருமே ஜீன்ஸ் அணிந்து, டாப்ஸ் போட்டிருந்தனர் என்ற போதிலும், அவை கிடைப்பதிலேயே மலிவானதாக தெரிந்தது. இவர்களுக்கும், இந்த பசங்களுக்கும் எந்த வித்த்திலும் ஒத்து போகவில்லையே என்பது, உறுத்த, நான் அவர்களின் சம்பாஷனையை கவனிக்க தொடங்கினேன்.

அந்த இரண்டி இளைஞர்களில், சேட்டு பையன் போல் தோற்றமளித்தவன் அவனருகில் இருந்த பெண்ணிடம், இன்னும் குடிக்கலையா? சீக்கிரம் முடிங்க. அப்பதானே, இன்னொன்னு ஆர்ட்ர் செய்ய முடியும்.. என்றான்.

அந்த பிங்க கலர் டாப்ஸ் அணிந்த பெண், என்னாது, இன்னொன்னா? சான்ஸே இல்லை என்றாள்.

நீங்கதானே பிளாடி மாரி கேட்டீங்க? அப்புறம் என்னா?

எனக்கு பிளாடி மாரி தான் புடிக்கும். ஆனா, இன்னொன்னு எல்லாம் முடியாது. ஆள விடுங்க..

சரி அப்ப, இந்த பீரை குடிச்சு பாருங்க..

அவள் வெட்கப்பட்டுக் கொண்டே வாங்கி ஒரு சிப் குடித்து விட்டு வைத்தாள்.
எப்படி இருக்கு என்று கேட்டபடி வெகு இயல்பாக, அவளுடைய இடுப்பில் கை வைத்து இறுக்கி கொண்டான் அந்த பையன். அவனுக்கு எதிரில் இருந்த பையனை பார்த்து, அவனுக்கு மட்டும் தெரியும்படி கண்ணடித்தான். ஜாடையை புரிந்துக் கொண்ட எதிரில் இருந்த பையன், அவன் அருகில் இருந்த பெண்ணிடம், வாங்க, அவங்க பேசிட்டு இருக்கட்டும்..நாமா வெளியே நின்னு வியூ பார்க்கலாம் என்று அழைத்துப் போனான். போகும் போதே, அந்த கறுப்பு கலர் டாப்ஸ் பெண்ணின் தோளில் கை போட்டு இறுக்கி கொண்டான்.

இப்போது பிங்க் கலர் டாப்ஸ் பெண் மற்றும் சேட் பையன் இருவரும் மிகவும் நெருங்கி அமர்ந்திருந்தனர். அவன் கேட்டான்..

நீங்க எந்த ஊர்?

திருச்சி..

அவங்களும் திருச்சியா?

இல்லை அவ புதுக்கோட்டை.

ஓ..அது எங்கே இருக்கு?

ம்ம்...பழைய கோட்டைக்கு பக்கத்துலே..

ஓ..ஒகே..

இங்கே என்ன வேலை பாக்குறீங்க?

ம்ம்..ஐ.டி லேதான்..நீங்க?

நாங்க ரெண்டு பேருமே பிசினஸ்..

ம்ம்...

இதை முடிச்சுட்டு, ஜாலியா காருலே ஒரு ரைட் போகலாமா?

அய்யோயோ.. நைட்டுக்குள்ளே ஹாஸ்டல் போகணுமே..

நைட் தானே.. டோண்ட் ஒர்ரி.. அதுக்குள்ளே வந்துடுலாம்..இப்ப இன்னும் ஒரு பிளாடி மாரி சொல்லவா?

இதற்க்குள், வெளியே சென்றவன், அந்த கறுப்பு டாப்ஸ் பெண்ணை, மொட்டைமாடியில் இருந்த நீச்சல் குளத்திற்க்குள் தள்ள போவதாய், விளையாடிக் கொண்டிருந்தான். போலியாய் பயந்து அவள் அவனை கட்டிக் கொண்டாள்..

பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் உள்ளே வந்த பின், இளைஞர்கள் இருவரும், டாய்லெட்க்கு சென்றனர்..பெண்கள் இருவரும் பேசிக் கொண்டனர்.

என்னாடி, இவன்ங்க ரைட்க்கு கூப்பிடுறாங்க? என்ன செய்யலாம்?

நமக்குதான் ஹாஸ்டல் போக சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கே.. போவோமா?..என்ன சொல்றே?

நீயே சொல்லிட்டே..ரைட் விடு போகலாம்.

இதற்க்குள் இளைஞர்கள் இருவரும் பில் செட்டில் செய்துவிட்டு வர, நான்கு பேரும் சிரித்தபடி சிறிது தள்ளாட்டத்துடன் வெளியே சென்றனர்.

இது நிகழ்ந்த இரண்டு மணி நேரமும், நாங்கள் இரண்டு பேர் அருகில் அமர்ந்திருப்பதோ, நான் அவர்களுடைய பேச்சை கவனிப்பதோ எந்த விதத்திலும், அவர்களை தொந்தரவு செய்யவில்லை.. எனக்கு இருவரும் நல்லபடியாக ஹாஸ்டல் திரும்ப வேண்டுமே என்று இருந்தது.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..