இசூமியின் நறுமணம் சிறுகதை நூலை தொகுத்து கொள்ள வசதியாக இரண்டாக பகுத்து கொள்கிறேன். முதலில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள்.
பிறர்க்கென உதவும் பெருமனம் யாருக்கு வரும்? மனத்துக்கண் மாசில்லாதவனுக்கே வரும் என்க. மனத்துக் கண் மாசு புகுந்துவிட்டால் அங்குப் பொறாமைப்பேய் முதற்கண் குடிபுகும். ஆசையெனும் அரக்கன் வாழ்வான்; வெகுளி எனும் வேண்டாத பண்பு வீறிடும்; இன்னாச் சொல் இனியதோர் இடம்பெறும். என்வேதான் மனத்துக் கண் மாசற்றுத் துலங்கவேண்டும்; அஃதே அறம் என் கிறார் வள்ளுவர்.//
இதில் சாமியாத முனையதிரியர் மனதில் இருக்கும் மாசு அவரை எவ்வளவு பாவத்தின் சம்பளங்கள் வாங்கி கொண்டாலும் கடைசிவரை தூய்மை அடையாமல் தடுக்குகிறது, கருணையோ, நன்மையை செய்யும் மனமோ இல்லாமல் ஆக்கி விடுகிறது. ஒரு நல்ல இலக்கியம் எதை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை சொல்வதை அது நிகழ்த்தும் மாயத்தை காட்டி புரிய வைக்கும், இந்த கதை அதை நிகழ்த்துகிறது.
இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் இன்னொரு உலகம் என்பது ஆண் பெண் உறவு, அது நிகழ்த்தும் மாயங்கள், இடர்கள், த்ரோகங்கள் முக்கியமாக கைவிடல்கள், அது உருவாக்கும் நிராதரவு நிலைகள். இதிலிருக்கும் பல கதைகள் இதை மையமாக கொண்டவைதான். இதை அடித்தளமாக கொண்டு வாழ்வில் நிகழும் நம்ப முடியாத புதிர்களையும், அது அளிக்கும் ஆச்சிர்யங்களையும் சொல்கின்றன. உதாரணமாக செர்ரி பிளாசம் கதை, அதில் வரும் நாயகிக்கு ஜப்பான் மீது கட்டற்ற பிரியம், ஈர்ப்பு இருக்கிறது, அது ஒருவகையில் முன்குறிப்புணர்த்தலாக கதையில் வருகிறது, ஏனெனில் வாழ்வில் வெறும் மூன்றுநான்கு நாள் மட்டுமே தங்கும் அங்கு தங்கும் அவள் தன் வாழ்வின் முக்கியமான ஒன்றை இழக்கிறாள், உண்மையில் இழப்பதற்காகவே அங்கு வருகிறாள் ! அந்நிலம் மீதான ஈர்ப்பெல்லாம் இதில் வந்து முடியவா என்பதை காணும் போது வாழ்வின் மர்மம் மீது மிகுந்த திகைப்பு உருகாகிறது. இந்த சிறுகதை இதை தாண்டியும் பல இழைகள் கொண்ட கதை, குடி உருவாக்கும் சிக்கலை தீவிரமாக சொல்கிறது, அதை விட குடும்ப உறவில் போன பிறகு தனது உடல்நலன் தன் குடும்பத்தையும் உள்ளடக்கியது எனும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் பொறுப்பின்மையின் விளைவுகளையும் பேசுகிறது, இதை தாண்டி இந்த கதையில் இன்னொரு மனித மனம் எடுக்கும் வடிவம் பற்றிய குறிப்பு, அவள் கணவன் இறந்த அந்த மூன்று நாட்கள் அழாதது. இக்கதைக்கு சற்று இணையான சூழலை நான் நேரில் பார்த்திருக்கிறேன், என் நண்பன் தன் மனைவியுடன் கர்நாடகாவில் இருந்து ரயிலில் வரும் வழியில் உடல் கோளாறினால் இறந்தான், இறந்த கணவனை கொண்டு கோவை வந்திறங்கினாள் அவள் மனைவி, நான் அவர்களை பார்த்தது பிறகு வீட்டில் நண்பன் அலங்கரிக்க பட்டு சடலமாக, அருகில் அவள் அவனையே பார்த்தபடி அழாமல் இருந்து கொண்டிருந்தாள், அவள் அழாதது எனக்கு, அங்கிருந்தவர்களுக்கு பெரிய பதபதைப்பை அளித்தது, இந்த சிறுகதை இந்நிகழ்வை ஞாபக படுத்தியது, மனம் ஏன் அப்படி ஒரு நிலை எடுத்து அழாமல் தடுக்க வைக்கிறது என்பதை யோசிக்கும் போது எனக்கு புதிராக இருக்கிறது.
எனக்கு மிக பிடித்த இன்னொரு கதை "தானிவத்தாரி ". ஒரு தவறு, அதனால் தன் வாழ்வு சூன்யமானதை சொல்லும் பெண், இன்னொரு இயற்கையின் உலகில் அந்த தவறை இனிமையான அனுபவமாக காண்கிறாள். இந்த சரிதவறை தாண்டியை சமன்தான் இந்த சிறுகதையை சிறந்த ஒன்றாக மாற்றுவதாக எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக இணையை தேடி கொள்ளும், அதற்காக கலைஞனாக மாறும் அந்த உகியிசு குருவி இந்த சிறுகதைக்கு இந்த சிறுகதையில் வரும் நாடோடியான சிமுராவிற்கு அழகான உவமானம் ! ஒரு நல்ல கதை ஒருவரின் பல மனநிலைகளை, மனநிலை வேறுபாடுகளை முன்வைக்கும், இந்த கதையில் நாயகி துயரத்தை வெளிப்படுத்துகிறாள், இன்னொரு இடத்தில் அதை மறந்து ஒரு பெண்ணாக (பெண்மன விருப்பங்கள் ) சிமுராவை ரசிக்கவும் செய்கிறாள். ஒன்றிற்காக இன்னொன்றை இழக்க விரும்பாத மனம் ! ஒரு இடத்தை தன் அலைபாயும் மனதை வெறுக்கிறாள், இன்னொரு இடத்தில் ரசிக்கிறாள். கதையில் அலைபாயும் மனம் வார்த்தை வரும் இடம் கதையின் திருப்புமுனை இடம், இது கதையில் அழகாக காந்திருக்கிறது, உள்ளே அழகாக ஜப்பானிய மொழி இதில் கலந்தும் கொள்கிறது.
இதையெல்லாம் மீறி இம்மாதிரியான சிறுகதைகள் இதையொற்றிய நம் அனுபங்களை திரும்ப நம்மிடம் கொண்டுவருவதும் வாசிப்பில் கிடைக்க கூடிய இன்னொரு விஷயம் என்று நினைக்கிறேன். உதாரணமாக மலரினும் மெல்லியது எனும் சிறுகதை, இந்த கதை ல பெண் வெறுமையை கடக்க வேறு ஏதுமில்லை, காமம் மட்டுமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட ஒரு கண்டத்தால்தான், கோபிகிருஷ்ணனின் லாகிரி என ஒரு சிறுகதை உண்டு, சற்றுநேரம் ஒரு ரேசன் கடையில் ஒரு திருமணமான பெண்ணும், திருமணமான கதை நாயகனும் மாறிமாறி பார்த்து ரசித்து கொள்வார்கள், கதை அந்த நேரத்து வெறுமையை கடக்கும் போதை அது என்று சொல்லும், இந்த கதை படிக்கும்போது முற்றிலும் வெறுமை கொண்ட இளமை வயதிலிருக்கும் பெண் காமம் எனும் போதையில் விழுவதை தவிர வேறு வாய்ப்புகளே இல்லை என்று எண்ண வைத்தது. சைமன் அதை தவறு என்று எண்ணாமல் தாண்டி தன்னை விடுவித்து கொண்டு நகரும் மனநிலை மேன்மையான மனிதர்களுக்குரியது ! ஆனால் அவன் மன்னித்தாலும், மறக்க வில்லை என்பது தெரியாவார்கள் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்ற வார்த்தைகளில் வெளிபடுகிறது, இவருக்கு நெருக்கமானவர்கள் மனைவியும், மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட அவனது அண்ணனும்தான். நான் இதுபோல வெளிநாடு போய் குடும்பம் சிதைந்த சிலரை சந்தித்து இருக்கிறேன், அதில் ஒருவர் மறக்க முடியாதவர், ஒரு மகன் உண்டு, இவர் இல்லாததால் உள்ளே நுழைந்த ஒருவனும், இவர் மனைவியும் சேர்ந்து மகனை மிக கொடுமை படுத்தி உள்ளனர். பிறகு இவர் வந்து, அவனை வெளியேற்றி எல்லா பஞ்சாயத்தும் முடிந்து அந்த பெண் தவறை உணர்ந்து இவரும் மன்னித்து சேரும்போது மகனால் அதை ஏற்க இயலவில்லை, மகனுக்காக அவர் மனைவியை விட்டுவிட்டு ஆனால் அவர் நினைவாக ஏங்கி கொண்டிருந்தார் என்னிடம் பேசும் போது !
சரி குறை சொல்லாமல் முடித்தால் விமர்சனம் என்பது ஒரு சார்பாக அமைந்து விடும் என்பதால், இந்த கதையில் சைமன் சாமிக்கு கிடா வெட்டுவதாக வருகிறது, ஒரு கிரிஸ்துவர் கிடா வெட்ட மாட்டார் என்று நினைக்கிறேன், எனவே கதை ஆசிரியர், அடுத்த பதிப்பில் சைமனை, அவர் மனைவியை, மகளை தாய்மதம் திருப்பும் படி "ஆடிட்டர்" பார்வையில் நின்று கேட்டு கொள்கிறேன்:)
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..